கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம உத்தியோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவருக்கு கடந்த 2025.03.08ம் திகதியான உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலகத்தில் கடமை நேரத்தில் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இப்போராட்டம் இடம்பெற்றது.
அத்துடன், கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை கோரியும் சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.