Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி – மருதலிங்கம் பிரதீபன்

ஏப்ரல் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேறும் தருவாயில் இருக்கின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொருத்தவரை 17 உள்ளூராட்சி சபைகளுக்காக 243 வட்டாரங்களில் தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 519 உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபை, பதின்மூன்று பிரதேச சபை என பதினேழு உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 517 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 292 அஞ்சல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. அதற்காக 292 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 21 ஆயிரத்து 64 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருக்கிறது.

இந்த வாக்களிப்பு செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக யாழ்ப்பாண மாவட்டம் 28 வலயங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.

அதற்குப் பொறுப்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்ததாக மேலும் 240 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில். புதிய மனிதனாக மாறிய இளைஞன்…
அடுத்த செய்தி வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு- மேலும் ஒரு மீனவரை கண்டுபிடிக்க கோரி உறவினர்கள் கோரிக்கை!

ஆகஸ்ட் 29, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என போலி பிரச்சாரம் – கஜேந்திரகுமாருக்கு பிணை

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ….

ஏப்ரல் 14, 2025
இலங்கை

மட்டக்களப்பு புல்லுமலையில் பஸ் வண்டி சாரதி நடத்துனரை தாக்கிய இருவர் கைது.

பிப்ரவரி 21, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?