மொன்றியல் நகரத்தை அழகுபடுத்தும் ‘வசந்தகாலத் தூய்மைப் பணி’ (Spring Cleaning) திட்டத்தை மாநகர சபை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
வழக்கத்தை விட இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே இம்முறை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிர்வாகக் குழுவின் தலைவர் கிளாட் பினார்ட் (Claude Pinard) இது குறித்துக் கூறுகையில், “மொன்றியல் நகரத்தின் அழகை மீட்டெடுக்கவும், குடிமக்களின் பெருமையை நிலைநாட்டவும் இந்தத் திட்டம் ஒரு ‘கூட்டு முயற்சி’யாக (Collective Effort) முன்னெடுக்கப்படுகிறது” என்றார்.
தூய்மைப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் பணியாற்றும் காலம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,000 பணியாளர்கள், 270 இயந்திரங்கள் மற்றும் இயந்திர துடைப்பங்கள் (Mechanical Sweepers) இந்தத் திட்டத்துக்காக களமிறக்கப்பட்டுள்ளன.
வர்த்தகப் பகுதிகள் மற்றும் வீடற்றோர் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, சிறப்பு ‘சமூகப் படைகள்’ (Social Brigades) உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


