மொன்றியலின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ‘பார்க் லா ஃபென்டைன்’ (Parc La Fontaine) பூங்காவில், குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் கடும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குப்பைக் கூடைகள் நிரம்பி வழிவதால் பூங்கா முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிளாட்டோ (Plateau) பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அண்மைக் காலமாகக் குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட ‘லே பிளாட்டோ-மொன்ட்-ரோயல்’ (Le Plateau-Mont-Royal) நிர்வாக சபை, ஊழியர் பற்றாக்குறை மற்றும் குப்பை அள்ளும் வாகனங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை மாலை முதல் அவசரக் குழுக்கள் மூலம் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
