Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு- மேலும் ஒரு மீனவரை கண்டுபிடிக்க கோரி உறவினர்கள் கோரிக்கை!

ஆகஸ்ட் 29, 2024
india
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26 ஆம் திகதி டெல்வின்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற, டெல்வின் ராஜ், வெள்ளைச்சாமி, சுரேஷ், எமரிட் ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று மறுநாள் செவ்வாய்க்கிழமை மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது.

அப்போது மூழ்கிய படகில் இருந்து டெல்வின் ராஜ், சுரேஷ் ஆகிய இரண்டு மீனவர்கள் நீந்தி இலங்கை கடற்படையினரின் உதவியால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாயமான மீனவர்கள் எமரிட் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு சக மீனவர்கள் இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று புதன் (29) மாலை நடுக்கடலில் மாயமான மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடலை கைப்பற்றிய மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு உடலை எடுத்து வந்து சேர்த்தனர். இதையடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நடுக்கடலில் மாயமான வெள்ளைச்சாமி என்ற மீனவரை அரசு தேடித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ள உறவினர்கள் இறந்த மீனவர் எமரிட் குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி புனேயில் ஹெலிகொப்டர் விபத்து!
அடுத்த செய்தி இந்தியாவில் அரங்கேறிய மேலுமொரு கொடுமை: நோயாளர் காவு வாகனத்தில் தகாத முறைக்கு உட்டுத்தப்பட்ட பெண்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் வெடிப்பு சம்பவம்

ஜூலை 19, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 16 ஏப்ரல் 2026

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஓடும் பேருந்திற்குள் யுவதிக்கு பாலியல் தொந்தரவு – இராணுவ கப்டன் கைது

ஜூன் 27, 2026
அண்மைய செய்திகள்உலகம்

400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மீது தாக்குதல்

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?