ரஷ்ய தாக்குதலில் மத்திய லிவிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த யுனெஸ்கோவினால் உலக மரபு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட புனித அன்ரூ தேவாலயத்தின் ஒரு பகுதி சேதமாக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 27 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 07 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.
சோபோர்னா ஸ்கொயர், பந்தரா வீதி, ஸ்கைவ் மாவட்டம், சேர்வோனா கள்வினா தெரு ஆகிய இடங்களிலும் ரஷ்ய ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குத்ல்களை நடத்தியுள்ளது.
யுனெஸ்கோ நிபுணர்கள் சேத விபரத்தை மதிப்பிட லீவுவிற்கு விஜயம் மேற்கொள்வார்களென உக்ரைன் வெளிநாட்டு அமைச்சர் ஹென்றி சிபிக தெரிவித்தார்.
