டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான 9 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று பிரம்மாண்டமான ‘மெழுகுவர்த்தி அஞ்சலி’ (Vigil) நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் மார்க் கார்னி மற்றும் அனைத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் நேரில் பங்கேற்கின்றனர்.
நாட்டின் வரலாற்றில் மிகவும் அரிதான நிகழ்வாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது அரசியல் மோதல்களைத் தள்ளிவைத்துவிட்டு, இந்தத் துயர்மிகு தருணத்தில் ஒன்றுபட்டுள்ளன.
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, என்.டி.பி (NDP) இடைக்காலத் தலைவர் டான் டேவிஸ் மற்றும் பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே ஆகியோர் பிரதமருடன் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
