நாட்டில் உணவகத் தொழில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகத் தெரிவிகப்பட்டுள்ளது.
‘ரெஸ்டாரன்ட்ஸ் கனடா’ (Restaurants Canada) அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் 44 சதவீத உணவகங்கள் தற்போது நஷ்டத்திலோ அல்லது லாபமே இல்லாத நிலையிலோ இயங்கி வருகின்றன.
89% உணவக உரிமையாளர்கள் தொழிலாளர் ஊதிய உயர்வு குறித்தும், 88% பேர் உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்தும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
பணவீக்கம் காரணமாக மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், மக்கள் உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்த்துள்ளானர்.
உணவகங்களுக்கான இட வாடகை மற்றும் காப்பீட்டுத் தொகை கடந்த ஆண்டை விடப் பெருமளவு உயர்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
