முன்னாள் லிபரல் கட்சித் தலைவர் ஸ்டீபன் டியான், அல்பர்ட்டா மாகாணத்தில் வளர்ந்து வரும் பிரிவினைவாதப் போக்கு குறித்து மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித்தை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அல்பர்ட்டா பிரிவினைவாதக் குழுக்களின் செயல்பாடுகளை “பிரிவினைவாத மிரட்டல்” (Separatist Blackmail) என்று வர்ணித்த ஸ்டீபன் டியான், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் டேனியல் ஸ்மித் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டினார்.
“அல்பர்ட்டா கனடாவுடன் இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா? என்பதில் முதலமைச்சர் தெளிவாக இருக்க வேண்டும்” என டியான் வலியுறுத்தினார்.
ஒரு பிரிவினைவாத வாக்கெடுப்பை (Referendum) நடத்துவதற்கான கையெழுத்துகளின் எண்ணிக்கையை 6 லட்சத்திலிருந்து சுமார் 1.78 லட்சமாகக் குறைத்த முதலமைச்சரின் செயல் “பொறுப்பற்றது” என அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையீடு குறித்தும் டியான் கவலை தெரிவித்தார்.
அல்பர்ட்டாவின் இயற்கை வளங்களைக் கைப்பற்றும் நோக்கில், ட்ரம்ப் அந்தப் பகுதியைத் தனது நாட்டுடன் இணைக்க (Annexation) முயலக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
