கனடா ஓய்வூதியத் திட்ட முதலீடுகள் அமைப்பு, 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற்கான தனது நோக்கத்தை, கைவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, புதன்கிழமை வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பல நிதி நிறுவனங்கள் காலநிலை சார் உறுதிப்பாடுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதை அடுத்து, இந்த அமைப்பும் அம்முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை, இம்முடிவை எதிர்ப்பவர்கள், காலநிலை சீர்குலைவு எதிர்கொள்ளும் உலகில் எதிர்கால ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய நிதி எவ்வாறு நன்மைகளைத் தொடரும் என்று, கேள்வி எழுப்பியுள்ளனர்.
கனடா ஓய்வூதியத் திட்ட முதலீடுகள் அமைப்பு தான் மேற்கொண்ட இந்த முடிவினால், உழைக்கும் மற்றும் ஓய்வுபெற்ற கனடியர்களின் நீண்டகால கூட்டு சேமிப்பை பொறுப்புடன் நிர்வகிக்கும் அதன் அடிப்படைக் கடமையை அது செய்யத் தவறிவிட்டது என்று, அவர்கள் விமர்சித்துள்ளனர்.

