பிரிட்டிஷ் கொலம்பியாவில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் 257 என்ற புதிய தொலைபேசி பகுதி குறியீடு நடைமுறைக்கு வரவுள்ளது.
தற்போதுள்ள தொலைபேசி எண்கள் தீர்ந்து வருவதால், புதிய எண்களை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலட்சக்கணக்கான புதிய தொலைபேசி எண்களை உருவாக்க முடியும் என கனடாவின் தொலைத்தொடர்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கனடிய வானொலி – தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு, இதற்கான தீர்மானத்தை, 2023 ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளது.

