Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

ஜூன் 17, 2024
தமிழகம்
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கடலுக்கு மீன் பிடிக்க சென்று நடுக்கடலில் படகு மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் தமிழகத்தின் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி இரவு மண்டபம் சேதுநகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரசாந்த், ஹனிபா, கலீல் ரகுமான், பரகத்துல்லா, ஆரோக்கியம் ஆகிய ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் மண்டபம் துறைமுகத்திலிருந்து சுமார் 8 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது படகின் அடிபகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

இதில் பிரசாந்த் மற்றும் ஹனீப்பா ஆகிய இருவரும் உயிருடன் சக மீனவர்களால் மீட்கப்பட்ட நிலையில் பரக்கத்துல்லா மற்றும் ஆரோக்கியம் இருவரும் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் கலீல் ரகுமான் என்ற மீனவர் காணாமல் போய் தற்போது வரை கிடைக்காததால் தொடர்ந்து மரைன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு மீன்பிடி துறைமுக மீனவ சங்கம் சார்பில் நேற்று கோயில்வாடி கடற்கரையில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினர்.

அக்கூட்டத்தில் இறந்த மூன்று மீனவர்களுக்கும் அனுதாபம் தெரிவிப்பதுடன், மூன்று மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் இன்று மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதனிடையே தமிழக அரசால் வழங்கப்பட்ட இரண்டு லட்சத்திற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் இறந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி காசோலையை வழங்கி உள்ளனர்.

முந்தைய செய்தி மூட நம்பிக்கையால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்!
அடுத்த செய்தி நடுக்கடலில் படகு உடைந்து மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

ஏப்ரல் 28, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு…

ஏப்ரல் 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

157 ஆண்டுகளாக, அமெரிக்காவில் இயங்கிய நிறுவனம் இனி மொன்றியலில்!

நவம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளாந்தம் மூவர் உயிரிழப்பு!

மார்ச் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?