இலங்கையில் ஏற்பட்ட “டித்வா” சூறாவளியால் போக்குவரத்து பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு இயக்கப்படும் இரவுநேர அஞ்சல் ரயில் உட்பட பல ரயில் சேவைகளை மீண்டும் இயக்க இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு கோட்டை மற்றும் திருகோணமலை இடையே இரவுநேர அஞ்சல் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொழும்பு கோட்டை மற்றும் மட்டக்களப்பு இடையே இயக்கப்படும் “புலதிசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ரயில் சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
