கியூபெக்கில் வசிக்கும் ஆங்கிலம் பேசும் மக்கள் எளிதாக சுகாதார சேவைகளைப் பெறும் நிலையை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் மத்திய அரசு 52 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
ஒதுக்கீடு
கியூபெக்கின் சர்ச்சைக்குரிய மொழிச் சட்டமான மசோதா 96 (Bill 96) அமலுக்கு வந்த பிறகு, ஆங்கில மொழிச் சேவைகள் கிடைக்குமா என்ற அச்சம் ஆங்கிலம் பேசும் சமூகத்தினரிடையே அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இந்த நிதி வழங்கப்படுகிறது.
கியூபெக் மாகாணத்தின் பல பகுதிகளிலும் வாழும் ஆங்கிலம் பேசும் சமூகத்தினர் எதிர்கொள்ளும் மொழித் தடைகளை நீக்கி, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அணுகுவதற்கு இந்த நிதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியின் பெரும்பகுதி டயலாக் மெக்கில் (Dialogue McGill) எனப்படும் திட்டத்திற்குச் செலவிடப்படவுள்ளது.
இத்திட்டம் சுகாதார மற்றும் சமூக சேவை வல்லுநர்கள், முன்ணணிப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இருமொழிகளிலும் பயிற்சி அளிக்கும்.
இதன் மூலம் இருமொழிகளில் பேசக்கூடிய சுகாதார சேவை ஊழியர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
