மொன்ட்ரியலின் தெற்குப் புறநகர் பகுதியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவனின் மரணம் குறித்து கியூபெக்கின் பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு (BEI) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜோசப்-டைக்னோல்ட் (Joseph-Daigneault) மற்றும் மொனாக்கோ (Monaco) தெருக்களின் சந்திப்புக்கு அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், நாரன் ரெசாய் (Nooran Rezay) என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான ஜானி இண்டிசோன் (Johnny Inthisone), பொலிஸார் சிறுவனை எவ்வித உரையாடலுமின்றி மிகவும் விரைவாக, சுட்டதாக கூறியுள்ளார்.
கியூபெக்கின் பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான BEI (Bureau des enquêtes indépendantes) இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன் இதற்காக ஐந்து புலனாய்வாளர்களை நியமித்துள்ளது.
