கடந்த ஆண்டு, டொராண்டோ பெருநகரப் பகுதியில் உள்ள நெரிசலைக் குறைக்க, டோல் எக்ஸ்பிரஸ்வேயை மீண்டும் கையகப்படுத்துவது குறித்து டக் ஃபோர்டு அரசாங்கம் பலமுறை ஆலோசித்து வந்த போதிலும், ஒன்ராறியோ நெடுஞ்சாலை 407 ஐ திரும்ப வாங்குவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
டொராண்டோவின் வடக்கே நெடுஞ்சாலையை வைத்திருக்கும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திரும்ப வாங்குவது குறித்து முற்போக்கு பழமைவாத அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. டக் ஃபோர்டு ஆரம்பத்தில் 2024 இலையுதிர்காலத்தில் 407 ஐ வாங்குவது குறித்து யோசித்ததாக தெரிவிக்கப்பட்டது , மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாகாணத் தேர்தலின் போது மீண்டும் வாங்குவது குறித்த யோசனையை எழுப்பியிருந்தார்.
முன்னாள் முதல்வர் மைக் ஹாரிஸின் அரசாங்கம் 1999 இல் $3.1 பில்லியனுக்கு நெடுஞ்சாலையை 99 ஆண்டுகளாக நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு விற்றது. சுங்கச் செலவு மற்றும் டொராண்டோவைச் சுற்றியுள்ள நெரிசல் இரண்டும் அதிகரித்துள்ளதால், இந்த நடவடிக்கை பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரியதாககாணப்படுகின்றது .
மேலும் இந்த விற்பனை குறித்து ஒண்டாரியோ முதல்வல்கர் டக் ஃபோர்டு தனது விரக்தியை வெளிப்படுத்தி, இதை ஒரு தவறு என தெரிவித்துள்ளார்.
