சீன ஆதரவு ஊடுருவல் குழு ஒன்று, கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை குறிவைத்துள்ளது என கனடாவின் இணைய உளவுத்துறை நிறுவனம் (CSE) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஊடுருவல் குழு கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் தகவல்களைத் திருடியதாகக் கூறப்படுகின்றது.
‘சல்ட் டைஃபூன்’ (Salt Typhoon) என்று அழைக்கப்படும் இந்த சீன ஆதரவு ஊடுருவல் குழு, பல சர்வதேச அரசு நிறுவனங்களின் கூட்டு அறிக்கையின் மூலம் மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான இந்த அறிக்கையில், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவின் CSE உட்பட பல நாடுகளின் உளவுத்துறை அமைப்புகள் இணைந்து கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஊடுருவிகள் “தொலைத்தொடர்பு, அரசு, போக்குவரத்து, விடுதி மற்றும் இராணுவ உள்கட்டமைப்பு” உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகளை குறிவைத்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
