கடந்த 1968 முதல் 1982 வரையான காலப்பகுதியில் பழங்குடியின தலைவர்கள் மற்றும் அமைப்புகளை ரகசியமாக உளவு பார்த்தமைக்காக, மத்திய பொலிஸ் படை, இன்று உத்தியோகபூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளது.
ஊடகமொன்று மேற்கொண்ட நீண்டகால ஆய்வின் மூலம் சுமார் 6,000 பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
“பழங்குடியின தீவிரவாதம்” (Native Extremism) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த உளவுத் திட்டத்தின் கீழ், சுமார் 30-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அமைப்புகளும் நூற்றுக்கணக்கான தனிநபர்களும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
பனிப்போர் காலத்தில் நிலவிய அரசியல் சூழலைச் சாதகமாக்கி, பழங்குடியினரின் உரிமைப் போராட்டங்களை முடக்குவதற்கு, 150 பொலிஸ் அதிகாரிகள் இந்த ரகசியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வெளியாகியுள்ள ஆவணங்களின்படி, பொலிஸார் சர்ச்சைக்குரிய முறைகளைக் கையாண்டுள்ளனர்.
பணம் கொடுத்து ஆட்களை அமர்த்தல், தொலைபேசி ஒட்டுக்கேட்பு, திட்டமிட்ட இடையூறுகள் முதலான முறைகளைக் கையாண்டு இந்த உளவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை, தற்போது வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.