நியூஃபவுண்ட்லாந்து மாகாணத்தின் கான்செப்ஷன் பே சவுத் மற்றும் பாரடைஸ் ஆகிய நகரங்களின் சில பகுதிகள், கட்டுப்பாடற்ற காட்டுத்தீ காரணமாக, குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய அவசர நிலையை எதிர்கொள்கின்றன.
அப்பிராந்தியத்தில், திங்கள்கிழமை மதியம் தொடங்கிய தாமஸ் பாண்ட் காட்டுத்தீ வேகமாகப் பரவி, 200 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிவடைந்துள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக, அப்பகுதிகளில் வாழும் 13,000 முதல் 15,000 மக்களுக்கு அவசரகால வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
டவுன் ஆப் சிபிஎஸ் மற்றும் பாரடைஸ் ஆகிய நகரங்களின் சில குடியிருப்பாளர்கள் எந்த நேரத்திலும் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாடிஸ் பாண்ட் தொழிற்பேட்டை பகுதியில் வாழும் மக்களுக்கு, முழுமையான வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
அப்பிராந்தியமூடாகச் செல்லும் கனடா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் பாதுகாப்பு காரணங்களுக்காக, மூடப்பட்டுள்ளது.
