மாஃபியா தலைவர் என சந்தேகிக்கப்படும் வின்சென்சோ “ஜிம்மி” டிமாரியாவை இத்தாலிக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு, கனடாவில் வெளிநாட்டு உளவுப் பணி மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் குறித்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இத்தாலியின் சிடெர்னோவில் பிறந்த 71 வயதான டிமாரியா, ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது கனடாவிற்கு வந்து தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்தவர்.
எனினும் அவர் கனேடியக் குடியுரிமையைப் பெற்றிருக்கவில்லை.
1981 இல் இரண்டாம் நிலைக் கொலைக் குற்றத்திற்காக எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவர் அனுபவித்தார்.
கனடா மற்றும் இத்தாலி அதிகாரிகள், டிமாரியாவை ‘Ndrangheta (ந்ரங்கேடா) என அழைக்கப்படும் சக்திவாய்ந்த மாஃபியா குழுவின் மூத்த தலைவராக கருதுகின்றனர்.
இந்த குழு கனடாவில், குறிப்பாக டொரண்டோவில் கணிசமான அளவில் செயல்படுகிறது.
2018 இல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் காரணமாக, டிமாரியா மீது மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புச் செயற்பாட்டினை அடிப்படையாக வைத்து, அவரை நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கனடிய மண்ணில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு “சட்டவிரோதமானது” என்று டிமாரியாவின் வழக்கறிஞர்கள் வாதிடுகின்றமை சுட்டிக்காட்டத் தக்கது.

