Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் சஸ்காட்செவனில் தீவிரமடையும் காட்டுத்தீ

ஜூன் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தின் வடக்குப் பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் வராமல், தொடர்ந்தும் எரிந்து வருகிறது.

இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இது பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தின் மொத்த பரப்பளவை விட அதிகம் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தீவிபத்து காரணமாக 30-க்கும் மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சஸ்காட்செவன் பொதுப் பாதுகாப்பு நிறுவனம் (SPSA) வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்படி, இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேர் காடுகள் எரிந்துள்ளன.

தினமும் புதிய தீ விபத்துகள் பதிவாகி வருகின்றன.

வியாழக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, சஸ்காட்செவனில் 27 தீ விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் ஆறு விபத்துகளில், தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

வியாழக்கிழமை பிற்பகல், லாக் லா ரோஞ்ச் இந்தியன் பேண்ட் (LLRIB), சிகாச்சு ஏரி (Sikachu Lake) மற்றும் கிளாம் பிரிட்ஜ் (Clam Bridge) பகுதிகளில் வசிக்கும் மக்களை கட்டாயமாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.

வெளியேற்றப்பட்ட மக்கள் குறிப்பிடத்தக்க சவால்களையும் மன அழுத்தத்தையும் எதிர்கொள்வதாக தெரியவருகின்றது.

செஞ்சிலுவைச் சங்கம் கிட்டத்தட்ட 1,000 ஹோட்டல் அறைகளை வெளியேற்றப்பட்டவர்களுக்காக ஒதுக்கியுள்ளதாகவும், தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் தனிப்பட்ட சேவைகளை வழங்குவதாக, செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கான மூத்த இயக்குனர் கிம் மேக்லீன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி நேட்டோ உறுப்பு நாடுகளால் கனடாவுக்கு நெருக்கடி
அடுத்த செய்தி நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களுக்கான சேவைகளைக் குறைக்க நடவடிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சிறுமி சார்லிக் பொல்லாக்கின் நிதியுதவியை நிறுத்த தீர்மானம்

ஜூன் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

Line 4 ரயில் பாதையில் ரயில் போக்குவரத்துச் சேவைக்கு தடை

நவம்பர் 11, 2025
இலங்கைஉலகம்

பிரதான செய்திகள்

ஆகஸ்ட் 1, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

மார்ச் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?