பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகங்களில் நிலவி வந்த முக்கிய தொழிலாளர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
துறைமுக முகவர்களை (foremen) பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும், அவர்களை நியமிக்கும் முதலாளிகளும் நான்கு ஆண்டு கால புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.
சுமார் 700 மேற்பார்வையாளர்களைக் கொண்ட இந்த தொழிற்சங்கம், 2023 மார்ச் மாதத்தில் முந்தைய ஒப்பந்தம் காலாவதியானதில் இருந்து ஒப்பந்தம் இல்லாமல் செயல்பட்டு வந்தது.
பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், பணியாளர்கள் எண்ணிக்கையில் உத்தரவாதம் வேண்டும் என்று மேற்பார்வையாளர்கள் கோரினர்.
கடந்த ஆண்டு முகவர்கள் கொள்கலன் முனையங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய காலத்திற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2023 முதல் மார்ச் 31, 2027 வரை செல்லுபடியாகும் என்று, இருதரப்பினரும் இணைந்து தெரிவித்துள்ளனர்.
மேலும், “ஒப்பந்தத்தின் விதிமுறைகளைச் செயல்படுத்த ஒன்றிணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளோம்” என, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கு கனடாவின் துறைமுகங்களுக்கான தொழிலாளர்களுடன் தொடர்புடைய இரண்டாவது பெரிய ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
