கனடாவின் பல பகுதிகளில் 911 அவசர அழைப்புகளை உரிய அவசர சேவை மையங்களுக்கு இணைப்பதில் இன்று காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல பொலிஸ் சேவைகள் 911 அழைப்புகளைப் பெறுவதில் இடையூறுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Montréal பொலிஸாரும் இந்த தொழில்நுட்பச் சிக்கலால் பாதிக்கப்பட்ட சேவைகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சில பகுதிகளில் 911 சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசரநிலை ஏற்பட்டால் பொதுமக்கள் 911 சேவையை முயற்சிக்குமாறும், அழைப்பு இணைக்கப்படவில்லை என்றால் தங்களது உள்ளூர் பொலிஸ் சேவையின் மாற்று தொடர்பு வழிகளைப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .


