Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்!

அக்டோபர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான ‘தருன்’ என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயல்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவவை கொல்ல துப்பாக்கியை மறைப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டு பிரதிகளை இஷாரா செவ்வந்திக்கு இந்த சட்டத்தரணி வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு போலி சட்டத்தரணி அடையாள அட்டை, சட்டத்தரணிகளுக்கான வாகன நுழைவு அனுமதி மற்றும் இரண்டு சட்டத்தரணி டைகளையும் வழங்கியது தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய சட்டத்தரணி கெஹல்பத்தர பத்மேவுக்கும் அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான தருனுக்கும் இடையே சிறிது காலமாக உறவுகளைப் பேணி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த உறவுகளின் அடிப்படையில், பத்மேவின் ஆலோசனையின் பேரில்,குறித்த சட்டத்தரணி கொலைக்கு உதவ முன்வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

குறித்த சட்டத்தரணி இஷாரா செவ்வந்தியைச் சந்தித்து சஞ்சீவவின் கொலைக்குத் தேவையான வசதிகளை வழங்கினார்.

அதன்படி, சஞ்சீவவின் கொலைக்கான துப்பாக்கியை நீதிமன்றத்திற்கு ரகசியமாக எடுத்துச் செல்ல குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டு பிரதிகள் வழங்கப்பட்டன. கொலையாளி இந்த பிரதிகளில் ஒன்றின் உள் பக்கங்களை வெட்டி, சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக துப்பாக்கியை அதில் மறைத்து வைத்திருந்தார்.

இஷாரா செவ்வந்தி நீதிமன்றத்திற்குள் நுழைவதற்கு சட்டத்தரணிகள் சங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை போலியாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனம் நுழைய சட்டத்தரணிகளுக்கு வழங்கப்படும் வாகன நுழைவு அனுமதிச் சீட்டையும் இந்த சட்டத்தரணி செவ்வந்திக்கு வழங்கியது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவரை 72 மணி நேரம் காவலில் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து வெளியான தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழா

ஜனவரி 8, 2026
அண்மைய செய்திகள்சினிமா

மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெளிநாட்டவர்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி – இலங்கை மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு!

ஆகஸ்ட் 20, 2025
இலங்கை

துருப்பிடித்த நிலையில் துப்பாக்கியொன்று மீட்பு!

அக்டோபர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?