வடக்கு கியூபெக்கில் காவல்துறையினர் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், தனது ஆறு வயது மகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆண்ட்ரூ நளுக்துக் தனது குடும்பத்தினரைச் சந்திக்க முடியாமல் ஒன்பது மாதங்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இனுஜுவாக்கில் வசிக்கும் தனது குடும்பத்திலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அவர் தற்போது காவலில் உள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற நாளிலிருந்து தனது குடும்பத்தினரை நேரில் சந்திக்க முடியாத நிலையில், ஆண்ட்ரூ நளுக்துக்கின் நீதிமன்ற விசாரணையும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
அவரது விசாரணை முதலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது செப்டம்பர் மாதத்திற்கான விசாரணைத் திகதியும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், தனது மகளை இழந்த துயரத்துடன் இருக்கும் நிலையில், குடும்பத்தினரிடமிருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையையும் ஆண்ட்ரூ நளுக்துக் எதிர்கொண்டு வருகிறார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் டிசம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


