10 வயது சிறுவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய ஸ்டெபானி போரல் (Stéphanie Borel) என்பவருக்கு 27 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மொன்ட்ரியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீட்டு அழைப்பு மணியை அடித்துவிட்டு ஓடும் விளையாட்டில் (Ding-dong ditch) அந்த சிறுவன் ஈடுபட்ட போதே, ஸ்டெபானி போரல் கொதிநீரை ஊற்றியுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மொன்ட்ரியலின் தெற்குப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்தத் தாக்குதலால் சிறுவனின் முகம், மார்பு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.
அவனது உடலின் 4 சதவீதப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், போரலுக்கு 27 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
