Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

இரட்டைக் கொலை வழக்கு தொடர்பில் விசாரணையை ஆரம்பித்த கியூபெக் உயர் நீதிமன்றம்

செப்டம்பர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரிலுள்ள சுட்-ஓவஸ்ட் (Sud-Ouest) பகுதியில், இளம் பெண் ஒருவரையும் அவரது 73 வயதுப் பாட்டியையும் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில், 26 வயதான மஹத் ஃபர்ரா (Mahad Farrah) என்பவருக்கு எதிரான இரட்டைக் கொலை வழக்கு விசாரணை கியூபெக் உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

22 வயதான ஜேட் ரசெட் பியூலியூ (Jade Beaulieu Racette) மற்றும் அவரது பாட்டியான 73 வயது ஹியூகெட் மரண்டா ரசெட் (Huguette Maranda Racette) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில், மஹத் ஃபர்ரா மீது இரண்டு முதன்மை நிலைக் கொலைக் குற்றச்சாட்டுகள் (First-degree murder) சுமத்தப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றில் வாதாடுகையில், இக்கொலைச் சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல என்றும், திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பதுங்குத் தாக்குதல் (Ambush) என்றும் சுட்டிக்காட்டினர்.

சம்பவத்தன்று குறுஞ்செய்திகள் (Text messages) மூலமாக ஜேட்டைத் தொடர்பு கொண்ட குற்றவாளி, அவரை வீட்டை விட்டு வெளியே வருமாறு பொறிவைத்து அழைத்துள்ளதாகப் அரசுத் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ஜேட் வீட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் மீதும், அவரைக் காப்பாற்ற முற்பட்ட அவரது பாட்டி ஹியூகெட் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதி மற்றும் ஜூரிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையின் போது, சந்தேகநபர் மஹத் ஃபர்ரா மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த நபர் ஆகியோருக்கு இடையிலான குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் சம்பவ இடத்தின் கண்காணிப்புக் கெமரா (CCTV) பதிவுகள் உள்ளிட்ட முக்கிய சாட்சியங்களை பொலிஸார் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் போதைப்பொருள் பயன்படுத்தும் மையத்தை மாற்றுமாறு பேரணி ஒன்று முன்னெடுப்பு
அடுத்த செய்தி அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் புதிய இராணுவத் தற்காப்புத் தளவாட நிறுவனம்

மே 20, 2026
கியூபெக்

மொன்றியல் நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – ஒருவர்  படுகாயம்

ஜூலை 20, 2026
உலகம்முதன்மை செய்தி

டிக்டொக் மீதான தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கை!

மார்ச் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?