Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கேரள மாநிலம் திருவல்லையைச் சேர்ந்த 16 வயதான ரைலன் அணில் என்ற 12-ஆம் வகுப்பு மாணவர், இந்தியாவின் முன்னணி உயர்கல்வித் தேர்வுகளான நீட் (NEET) மறுதேர்வு இணையதளம் மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கியால் நிர்வகிக்கப்பட்ட ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) தளங்களின் கிளவுட் சேமிப்பகத்தில் இருந்த மிக முக்கியப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்வு மையங்களின் விவரங்கள், பார்வையாளர்களின் தரவுகள், தேர்வர்களின் ஹால் டிக்கெட்டுகள் மற்றும் தேர்வு முடிவுகள் போன்ற பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி அணுகக்கூடிய நிலையில் இருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

தற்போது பெற்றோருடன் துபாயில் வசித்து வரும் இந்த மாணவரின் அசாதாரண கணினித் திறமையையும் சைபர் பாதுகாப்புப் புலமையையும் அங்கீகரிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஐ.ஐ.டி கான்பூர் நிறுவனம் அவரைத் தனது ‘C3iHub’ சைபர் பாதுகாப்பு புத்தாக்க மையத்தில் இளநிலைச் சைபர் பாதுகாப்புப் பொறியாளராகப் பணியமர்த்தியுள்ளது.

இதன் மூலம் ஐ.ஐ.டி வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் பொறியாளராகப் பணியமர்த்தப்பட்ட நபர் என்ற வரலாற்றுச் சாதனையை ரைலன் படைத்துள்ளார்.

பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வரும் ரைலன், துபாயில் இருந்தபடியே தொலைதூர ஆலோசகராகப் பணியாற்றுவார் என்றும், கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பாதுகாப்பு பகுப்பாய்வுப் பணிகளில் மட்டுமே அவர் ஈடுபடுத்தப்படுவார் என்றும் ஐ.ஐ.டி கான்பூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறுவயது முதலே ஹேக்கிங் சார்ந்த திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டுத் தனது 8-ஆம் வகுப்பு முதல் சைபர் பாதுகாப்பைக் கற்று வரும் இந்த மாணவரின் சாதனைக்குக் கல்வி மற்றும் தொழில்நுட்ப உலகினர் இடையே பலத்த பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முந்தைய செய்தி ரஷ்யாவில் வாடிக்கையாளரைத் தாக்க முயன்ற மனித உருவ ரோபோ!
அடுத்த செய்தி அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

Get Out’ கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் த.வெ.க தலைவர் விஜய்

பிப்ரவரி 26, 2025
இந்தியா

அநாதரவாக நின்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்

டிசம்பர் 13, 2025
இந்தியா

மீண்டும் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளார் தவெக தலைவர் விஜய்

நவம்பர் 22, 2025
இந்தியா

ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை நாடிய விஜய்

மே 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?