தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கேட்டிருந்த நிலையில், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை நாளை காலை அறிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்றது. அன்றைய தினம் இடம்பெற்ற பேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4 ஆம் திகதி எண்ணப்பட்டு, இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக முதலான பிரதான கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், முதன்முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்து சாதனை படைத்தது.
ஆனால் 118 என்று எண்ணிக்கை இருந்தால் மட்டுமே, தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.ஆனால் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியமையால், அந்தக் ஆட்சி அமைக்க முடியாத சூழலை உருவாக்கி உள்ளது.
மேலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கோரியது. இதனையடுத்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமது ஆதரவை, தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ளன. எனினும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவை நாளை காலை
அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேவையான பெரும்பான்மை உறுதியாகாத நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
