உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், தங்கள் பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், தலைமையில் நடைபெற்ற கோவை செம்மொழி பூங்கா திறப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், திறப்பு விழா நடைபெற்றிருந்ததை அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளும் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது கூட தெரியவில்லை என, அண்ணாமலை கூறியுள்ளார்.
வெறும் உதட்டளவில் தமிழ்ப் பற்று பேசாமல், உண்மையாகவே தமிழ் மொழி மீது அக்கறை காட்டும்படி, முதல்வரை தாம் கேட்டுக் கொள்வதாக
அவர் தெரிவித்துள்ளார்.


