ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேனவின் திடீர் மரணம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தொடர்பு இருப்பதாக கபில சந்திரசேன ஏற்கனவே ஒரு சத்தியக் கடதாசியை (Affidavit) தாக்கல் செய்திருந்ததை சுட்டிக்காட்டிய காரியவசம், இத்தருணத்தில் நிகழ்ந்துள்ள அவரது மரணம் தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் இது குறித்து முறையான விசாரணை அவசியம் எனவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
