Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துங்கள் – மகேஷ் தெரிவிப்பு

ஜூலை 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எல்லைதாண்டி வரும் தமிழக கடற்தொழிலாளர்களை துப்பாக்கி சூடு நடாத்தியாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் மகேஷ் கடற்படையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தீவகப் பகுதிகளில் அண்மைக் காலங்களாக இந்திய இழுவைமடிப் படகுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அதனால் எமது கடற்தொழிலாளர்களின் பெருந்தொகையான வலைகள், உடைமைகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாங்களும் எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ மகஜர்கள் கையளித்தும், சொல்லொண்ணாத் துயரங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம், சகல தரப்பினருக்கும் முறையிட்டும், அது இன்னும் நிறுத்தப்பட்டதாக இல்லை.

முதலமைச்சர் விஜய் பொறுப்பெடுத்த பிறகு, ஏதாவது கட்டுப்பாடு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் அதிகமான எங்களது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றனர்.

மன்னாரில் ஒரு படகு கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறது. அது எங்களுக்குத் திருப்தியாக இல்லை. 1000 படகு வரும்போது ஒன்றை கைது செய்வதனால் எந்தத் தீர்வும் காண முடியாது.

கடற்படையினரிடம் நாங்கள் கோருவது, நீங்கள் எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகம் செய்தாவது இந்தப்படகுகளை நிறுத்துவதற்குரிய வழிகளைச் செய்யுங்கள். நெடுக கேட்டுக்கொண்டு கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது.

ஏனென்றால், இந்திய மீனவர்களோடு பேசுவதாலையோ அல்லது இந்திய அரசாங்கத்தோடு பேசுவதாலையோ எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

அவர்கள் பேசிப் பேசியே எங்களது மக்களை ஏமாற்றி, எங்களது வளங்களையும் சூறையாடி, எங்களையும் அழித்து, இன்றைக்கு கடற்றொழில் சமூகம் பெருந்துயரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஆகையால், இதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கடற்படைக்கும், ஜனாதிபதிக்கும் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.

எங்களுடைய 117 சங்கங்களும், சமாசச் சம்மேளனங்களும் கடற்படைக்கு நன்றியுடையவர்களாகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடியவர்களாகவும் நாங்கள் என்றைக்கும் இருப்போம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் மயூரன்
அடுத்த செய்தி 14 வய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபர் – 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

பிப்ரவரி 16, 2026
இலங்கை

மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி.

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்சில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு

ஜூன் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தலாவ பேருந்து விபத்து 6பேர் பலி, 40ற்கு மேற்பட்டோர் படுகாயம்!

நவம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?