இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தொடருந்தில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அப்பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது தொடர்பில் அந்த இளைஞர் கூறுகையில்,
தொடருந்தில் பயணம் செய்யும் சிலர் அப்பெண்ணைத் தவறாக பார்ப்பதை உணர்ந்தமையால் அவருக்கு வீட்டில் அடைக்கலம் கொடுக்க நினைத்ததாக கூறியுள்ளார்.
மேலும் குறித்த பெண்ணின் வாழ்க்கையை அறிந்த பிறகு அவருக்கு வாழ்க்கைத் துணையாக இருக்க முடிவெடுத்ததாகக் அந்த இளைஞர் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
