நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு இடங்களில் சேதம் ஏட்பட்டுள்ளது . இந்நிலையில் 5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக கண்டி மாவட்டம் பதிவாகியுள்ளதோடு, இங்கு 1,568 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதுடன் 14,111 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.
அடுத்ததாக நுவரெலியா மாவட்டத்தில், 767 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் , 3,742 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில், 627 வீடுகள் அழிக்கப்பட்டன, 20,813 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.
கொழும்பு மாவட்டத்தில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர், 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவ் அனர்த்தத்தால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளதுடன், அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் 847 இடம்பெயர்வு முகாம்களில் 82,000 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


