கனடாவின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மாலை வரை ஆபத்தான இடியுடன் கூடிய புயல்கள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல்களின்போது மணிக்கு 110 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று, பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை மற்றும் கடும் மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கால் டொலர் முதல் பிங்-பாங் பந்து அளவு வரையிலான ஆலங்கட்டிகள் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில பகுதிகளில் குறுகிய காலத்தில் 50 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய புயல்கள் இன்று பிற்பகல் முதல் மாலை நேரத்தில், நகர்ந்து வரும் குளிர் முனைப்பகுதியை ஒட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்தில் நிலவும் மேகமூட்டம் காரணமாக புயல்களின் தீவிரம் தொடர்பில் சில நிச்சயமற்ற நிலை காணப்பட்டாலும், சமீபத்திய வானிலைத் தரவுகள் மற்றும் மாதிரிகளின் அடிப்படையில் கடுமையான வானிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல்களின்போது சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பலத்த காற்று, பெரிய ஆலங்கட்டி மழை மற்றும் கடும் மழை முக்கிய அபாயங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன், சில இடியுடன் கூடிய புயல்கள் சூறாவளியை (Tornado) உருவாக்குவதற்கும் சாதகமான நிலை காணப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, கடும் புயல் தாக்கம் ஏற்படும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



