கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் நாளை (03) இரவு 8 மணி முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) இரவு 8 மணி வரைக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி நுகேகொட, கொஹீவல, தெஹிவளை,கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, ராவத்தவத்தை, சொய்சாபுர, அங்குலான, இடிப்பெத்த, கட்டுகுருந்த, கட்டுபெத்த, கல்தெமுல்ல, முத்துவேல், கோரலவெல்ல ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் செத்சிறிபாய, ஹிம்புட்டானை, உடுமுல்ல வீதி டபிள்யூ.ஏ.சில்வா, மாளிகைகொடெல்ல, ஹெவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



