அரசியல் நியமனங்களை அரச அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும் அடக்கு முறையான ஆட்சியின் கீழ் அரச அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர் இது தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றை நாடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பிரஜா சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு , அதனூடாக கிராம மட்டத்தில் “சமூக அபிவிருத்தி குழு ” என உருவாக்கி அதன் தலைவராக கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிரதேச செயலர் நியமித்து , அவருக்கான நியமன கடிதங்களையும் வழங்கி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து குறித்த குழுவின் தலைவராக செயற்படுபவர்கள் கிராம மட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் , பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் , மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை பின் தள்ளி , முன் வரிசைகளில் அமர்ந்திருந்து அரசாங்கத்தின் திட்டங்களை ஆமோதித்து நடைமுறைப்படுத்தும் போக்கினை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் குறித்த நியமனம் குறித்து பிரதேச சபை தவிசாளர்கள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



