தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரட்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்ததை அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா இருவர் கொண்ட ஆள் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு கட்டளையிட்டு 2026 ஜனவரி 20 ம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
குறித்த தேரர் கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என தெரிவித்தார்.
குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கிய நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்யுமாறு 15-12-2025 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாடு பயணத்தடை விதித்து மட்டு மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேரருக்கு மேல் நீதிமன்றம் பிடிவிறாந்து வழங்கியதையடுத்து தேரர் இன்று புதன்கிழமை 3 சிரேஷ்ட சட்டத்தரணி களுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்ததையடுத்து நீதிபதி தேரை ஒரு இலட்சம் ரூபா கொண்ட இருவர் கொண்ட சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 2026 ம் ஆண்டு ஜனவரி 20 ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
அதேவேளை பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


