Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

ஆகஸ்ட் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனது அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை (Security Screening) முறைகளை முழுமையாக மீளாய்வு செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெல்ஜியத்தில் அமைந்துள்ள நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கனடியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தையடுத்தே, மத்திய அரசு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பெல்ஜியத்தின் மொன்ஸ் (Mons) நகரில் அமைந்துள்ள நேட்டோ அமைப்பின் ஐரோப்பியக் கூட்டுப் படைகளின் உயர் தலைமையகத்தில் (SHAPE) பயிற்சியாளராக (Intern) பணியாற்றி வந்த பிய்வே ஜாங் (Biwei Zhang) என்ற சீன வம்சாவளி கனடியப் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

நேட்டோ தலைமையகத்தின் தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவில் பணியாற்றிய ஜாங், தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கோப்புகளை அணுக முயன்றதாகவும், தனக்கு அனுமதி இல்லாத பகுதிகளுக்குச் சென்றதாகவும் நேட்டோ பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னரே பெல்ஜிய அதிகாரிகள் aந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.

உளவு பார்த்தமை மற்றும் குற்றவியல் அமைப்பொன்றில் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெல்ஜியப் பொலிஸாரால் இவர் மீது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), நேட்டோ போன்ற சர்வதேச அமைப்புகளில் கனடியர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசீலனைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது குறித்து, மத்திய அரசாங்கம் தீவிர விசாரணை நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

கனடியப் பாதுகாப்பு புலனாய்வுச் சேவையின் (CSIS) பாதுகாப்பு மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சர்வதேச அமைப்புகளில் பணியாற்றும்  கனடியர்களுக்குப் பாதுகாப்பு அனுமதி (Security Clearance) வழங்குவது அல்லது ரத்து செய்வது தொடர்பான இறுதி முடிவை மத்திய வெளியுறவு அமைச்சு மேற்கொள்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்
அடுத்த செய்தி பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவாவில் 34 வயது மதிக்கத்தக்க நபர் கைது

ஜனவரி 14, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் 9 கிளைகளை மூடிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம்

செப்டம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தொழில்வாய்ப்பு விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

பிப்ரவரி 5, 2025
கனடா

பிரதமர் மார்க் கார்னிக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ள கலாசார மற்றும் கலை அமைப்புகள்

ஆகஸ்ட் 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?