இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பமான காலப்பகுதியில் சோர்வு மற்றும் வெப்ப தசைப்பிடிப்பை ஏட்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது மக்கள் தேவையான அளவு நீரை அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

