கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள ஒரு கட்டிடத்தின் 3வது மாடி கடையொன்றில் திடீரென தீப்பரவியுள்ளது.
இத் தீப்பரவலை கட்டுப்படுத்துவதட்கான நடவடிக்கைகளை தீயணைப்பு படையினர் மேட்க்கொண்டு வருவதுடன் தீப்பரவலுக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் அறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் விமானப்படையும் இணைந்துள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்தநிலையில், நிலைமைகளை கருத்திற்கொண்டு தீயணைப்பு வாகனங்களுக்கு மேலதிகமாக பெல் 212 ரக உலங்கு வானூர்தியொன்றையும் ஈடுபடுத்துவதற்கு விமானப் படை முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


