ஆப்கானிஸ்தானில் 4.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இன்று காலை 9.30 மணியளில் நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது.
அட்சரேகை 36.545, தீா்க்கரேகை 71.409, பூமிக்கடியில் 140 கி,மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவானது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாகவும், எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லையென குறிப்பிட்டுள்ளது.
