குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் மொறு மொறு வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
மிளகு – 1 சிறிய ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
உளுத்தம் பருப்பை நன்றாகக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு மாவை சிறு வடையாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.

