வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு (உள்ளூர் நேரப்படி )இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக வத்தளை பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.




