அமெரிக்க இராணுவ தளங்கள் இனி இந்த பகுதியில் பாதுகாப்பாக செயல்பட முடியாது என ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பகுதியில் அமெரிக்காவின் இராணுவ தலையீடுகள் தொடர்ந்தால், அதற்கு எதிரான நிலைப்பாடு மேலும் கடுமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உலக வர்த்தகத்திற்குப் பிரதான பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் விநியோகம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற உலகளாவிய பொருளாதார தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
