நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் வீட்டு விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு, Statistics Canada எனப்படும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் புள்ளிவிபரவியல் சட்டத்தின்படி, இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பது ஒவ்வொரு குடிமகனின் சட்டபூர்வ கடமையாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
தகவல்களை வழங்க மறுப்பவர்களுக்கு 500 டொலர் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சேகரிக்கப்படும் இந்தத் தரவுகள், நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கு முதுகெலும்பாக அமைகின்றன என புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் census.gc.ca என்ற இணையதளத்திற்குச் சென்று விரைவாகப் படிவத்தைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதன்முறையாக, பாலின அடையாளம், வீடற்ற நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்த கூடுதல் கேள்விகள், புள்ளிவிபரவியல் தகவல்களைக் கோரும் நீண்ட படிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
