2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் கல்கரி காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காவலர் கிரெய்க் ஸ்டோதார்ட் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மே 29, 2023 அன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வெஸ்லி டேவிட்சன் மற்றும் லெவோன் பாய்ஸ் ஃபாக்ஸ் ஆகியோர் உயிரிழந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது நபரான ஃபாக்ஸின் சகோதரர் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் கல்கரி உள் நகரத்தினூடாக செல்லும் முக்கிய சாலையான மெமோரியல் டிரைவில் இடம்பெற்றது.
காவல்துறை அதிகாரிகளால் மரணம் அல்லது கடுமையான காயம் ஏற்படும் சம்பவங்களை விசாரிக்கும் மாகாண அமைப்பான ஆல்பர்ட்டா தீவிரச் சம்பவ பதிலளிப்புக் குழு (ASIRT), தனது நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த குற்றச்சாட்டுகளை அறிவித்துள்ளது.
