இலங்கையில் அதிகளவான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் கடந்த மாதம் பொரளை சீவலியாபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தோடு தொடர்புடைய சிறுவனை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த 17 வயதுடையவரே சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) நடத்தப்பட்ட சோதனையின்போது கைதானார்
கைதான சிறுவன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடையவரென்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
