பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்பிளர் ரிட்ஜ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பாதிவாகியிருந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் OPEN AI மீது வழக்கொன்றை தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் OpenAI மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், டம்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
கனடாவில் இடம்பெற்ற பிரச்சினை தொடர்பில் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், குறித்த விடயத்தை அமெரிக்க சட்டத்தின் கீழ் நிரூபிப்பது மிகவும் சிக்கலாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
குடும்பங்கள், ChatGPT பயன்படுத்திய சந்தேகநபரின் உரையாடல்கள் நேரடியாக தாக்குதலுக்கு வழிவகுத்தன என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதோடு, இது தொழில்நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடினமான ஒன்ராகவுள்ளது.
இதன்படி OpenAI நிறுவனத்தின் உள் பாதுகாப்பு விவாதங்கள், எச்சரிக்கை முறைமைகள், மற்றும் கணக்கு தடை செய்யப்பட்ட பிறகும் புதிய கணக்கு உருவாக்கப்பட்டது போன்ற விவரங்கள் நீதிமன்றத்தில் ஆய்வு செய்யப்படுவதோடு இத்தகைய தகவல்களை முழுமையாக பெறுவது நீண்ட கால நீதிமன்றப் போராட்டமாக மாற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு வன்முறைச் சம்பவத்திற்கு “சட்டபூர்வ காரணம்” ஆனதா என்பது இதுவரை தெளிவாக தீர்மானிக்கப்படாத புதிய சட்டப்பரப்பாகும்.
அதனால் இந்த வழக்குகள் சிக்கல்களை உருவாக்குகின்றது. இந்த வழக்குகளில், OpenAI முன்னதாகவே அச்சுறுத்தலான ChatGPT உரையாடல்களை கண்டறிந்திருந்தும் காவல்துறைக்கு தகவல் தரவில்லை என்று குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றனர். OpenAI தலைமை நிர்வாக அதிகாரி Sam Altman பின்னர் பொதுமக்களிடம் இது தொடர்பி மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
