மாலபே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் 22 வயது இளைஞர்கள் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களை நடத்தியமையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மோட்டார் சைக்கிளை செலுத்துகின்றனர் என கடுவெல பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை கருத்திற் கொண்டு பொலிஸார் ஆராய்ந்ததில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இரண்டுக்கு பத்தி இல்லை என பொலீசார் தெரிவித்துள்ளனர்.
